ஸ்ரீநகரில் பனிமழை -ராகுல் யாத்திரை நிறைவு- பிரியங்கா, திருச்சி சிவா, உமர் அப்துல்லா பங்கேற்பு!
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது.
ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று கொட்டும் பனிமழைக்கு நடுவே நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, திமுக எம்பி திருச்சி சிவா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையை திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 5 மாதங்களாக தொடர்ச்சியாக நடைபயணம் மேற்கொண்ட ராகுலின் பயணம் தற்போது ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது.
கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசங்கள் வழியாக ஜம்மு காஷ்மீரை சென்றடைந்தது ராகுல் காந்தியின் பயணம். நாடு முழுவதும் பல இடங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள், துறைசார் வல்லுநர்கள் ராகுலின் பயணத்தில் இணைந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

ராகுல் காந்தியின் பயணம் ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது. ஸ்ரீநகரின் பாந்தா செளக்கில் இருந்து 8 கி.மீ. தூரம் நேற்று ராகுல் பாதயாத்திரை மேற்கொண்டார். பின்னர் லால் செளக்கில் ராகுல் காந்தி தேசியக் கொடி ஏற்றினார். 75 ஆண்டுகளுக்கு முன்னர் இதே லால் சவுக்கில் ராகுலின் தாத்தா ஜவஹர்லால் நேரு கொடி ஏற்றும் புகைப்படங்களையும் ராகுல் கொடியேற்றும் படத்தையும் இணைந்து காங்கிரசார் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக அப்பகுதியில் பனிக்கட்டிகளை சகோதரி பிரியங்கா மீது எறிந்து இருவரும் விளையாடிய காட்சியை அனைவரும் ரசித்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீநகர் எஸ்கே மைதானத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டம் தொடங்கும் போது அப்பகுதியில் கனமான பனிமழை கொட்டியது. இக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் பதுல்லா, இடதுசாரித் தலைவர் டி.ராஜா, திமுக எம்பி திருச்சி சிவா, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications