ஹெலிகாப்டர் ஊழல்: இந்திய விமானப்படை முன்னாள் தளபதி மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு
பானாஜி: அன்னிய செலவாணி மோசடி வழக்கில் இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகிக்கு எதிராக அமலாக்க துறை வழக்கு வழக்குப்பதிவு செய்துள்ளது.

வி.வி.ஐ.பிகளுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழல் வழக்கில் இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமலாக்க பிரிவு இன்று மேலும் ஒரு வழக்கை இவர் மீது பதிவு செய்துள்ளது. அன்னிய செலவாணி மோசடி செய்ததாக இந்த வழக்கை அமலாக்க பிரிவு பதிந்துள்ளது. இதேபோன்ற வழக்கை குற்றம்சாட்டப்பட்ட பிறர் மீதும் அமலாக்கப்பிரிவு பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.3600 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர் ஊழல் குறித்து சிபிஐ இன்று, கோவா மாநில ஆளுநர் பி.வி.வன்சோவிடம் விசாரணை நடத்தும் நிலையில், தியாகி மீது அமலாக்க பிரிவு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. ஹெலிகாப்டர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த உயர வரம்பை தியாகி குறைத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
இவ்வாறு உயரத்தை குறைத்ததன் மூலம், அதுபோன்ற ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் ஆகஸ்டாவெஸ்ட்லேன்ட் நிறுவனத்தையும் டெண்டரில் பங்கேற்க செய்ததுள்ளதாக தியாகி மீது குற்றம்சாட்டப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications