பெங்களூர் வன்முறை.. வேதனை அளிக்கிறது.. காவிரி தொடர்பாக ரம்யா முதல் முறையாக கருத்து!
பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வேதனை அளிப்பதாக நடிகை குத்து ரம்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனை தொடர்பாக பெங்களூர் நகரம் பதட்டமாக உள்ளது. கன்னட அமைப்பினர் தமிழர்களின் கடைகளாக பார்த்து பார்த்து தாக்கி வருகின்றனர். மேலும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தாக்குவதுடன், தீ வைத்து எரித்து வருகிறார்கள்.

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சுகிறார்கள். பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெங்களூரில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகை குத்து ரம்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. வன்முறையால் வன்முறை தான் ஏற்படும்.
Violence is not the solution to the problem. Violence begets violence.
— Divya Spandana/Ramya (@divyaspandana) September 12, 2016
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வேதனை அளிக்கிறது. மத்திய அரசு, பிரதமர் தலையிட்டு இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Supreme Court order is disheartening- The Centre @PMOIndia must intervene, get the states together for a dialogue.
— Divya Spandana/Ramya (@divyaspandana) September 12, 2016












Click it and Unblock the Notifications