பஞ்சாப்: இந்தியா- பாக். எல்லையில் ரூ. 110 கோடி ஹெராயின் பறிமுதல்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா - பாகிஸ்தான் எல்லையருகே அபோஹர் செக்டர் எனுமிடத்தில் இந்தியாவுக்குள் கடத்த முயன்ற 110 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பஞ்சாப் மாநில எல்லைப் பாதுகாப்பு படைத் தலைவர் அணில் பாலிவால் கூறும்போது,

அதிக அளவு போதைப்பொருட்களை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஒரு கும்பல் கடத்தி வர உள்ளதாக உளவுத்துறையிடமிருந்து தகவல் கிடைத்தது, ஜலந்தர் மாவட்டத்திலுள்ள அபோஹர் செக்டர் பஹடுர்கே சோதனைச் சாவடிக்கு அருகாமையில் உள்ள இந்திய-பாக் எல்லைப் பகுதியை எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று அதிகாலை அந்த பகுதியில் சிலரின் நடமாட்டம் தென்பட்டது. அப்போது எல்லைப் பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து துப்பாக்கிகளால் சுட்டனர். இதையடுத்து, அவர்கள் தப்பி ஓடினர். காலை விடிந்ததும் அந்த இடத்தில் சென்று பார்த்தபோது அங்கே 22 பாக்கெட்களில் ஹெராயின் போதைப்போருகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு 110 கோடி ரூபாய் ஆகும். அதனை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்", என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications