இன்று தாக்கலாகும் மத்திய பட்ஜெட் ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும்: அமித்ஷா சொல்கிறார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மோடி அரசின் முதல் முழு பொது பட்ஜெட் ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், 2015-2016-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதை தாக்கல் செய்கிறார். நரேந்திர மோடி அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட் இது.

இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் உட்பட பல்வேறு சலுகைகளை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மோடி அரசின் முதல் முழு பொது பட்ஜெட் ஏழைகளுக்கு சூப்பர் பட்ஜெட்டாக இருக்கும். மேலும் இதன் மூலம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி ஏழைகளின் கண்ணீரை துடைக்கும்' என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications