“ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் என்னை நம்ப வேண்டும்” – மோதி உரையிலிருந்து முக்கிய தகவல்கள்
Subscribe to Oneindia Tamil
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி வழங்கிவந்த, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370வது சட்டப் பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கிய நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு முதன் முதலாக பயணம் மேற்கொண்டுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மோதி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி அங்கிருந்து ஓர் உரை நிகழ்த்தினார்.
- ஜம்முவில் நரேந்திர மோதி: கார்பன் சமநிலை அடையப் போகும் பள்ளி ஊராட்சி
- அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு: புதுவை கட்சி நிர்வாகிகள், பலூன் விற்பனையாளர் கைது
ஜம்முவில் மோதி பேசியதில் முக்கிய அம்சங்கள்
- மத்திய அரசின் திட்டங்கள் தற்போது இங்கு நேரடியாக செயல்படுத்தப்படுகின்றன. அது இங்குள்ள கிராமங்களுக்கு பெரிதும் பலனளிக்கிறது.
- எல்பிஜி வசதியாக இருந்தாலும் சரி கழிவறை வசதியாக இருந்தாலும் சரி அது இங்குள்ள மக்களை நேரடியாக சென்றடைகிறது.
- வரக்கூடிய 25 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் பெரும் வளர்ச்சியடைந்திருக்கும்.
- கடந்த 70 ஆண்டுகளில் வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாய் தனியார் முதலீடுகள் மட்டுமே இங்கு மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 38 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் இங்கு வரத் தொடங்கியுள்ளன.
- ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் என்னை நம்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் முன்னோர்கள் வாழ்ந்த கடினமாக வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டாம். நீங்கள் என்னை நம்ப வேண்டும் என்றுதான் நான் இங்கு வந்துள்ளேன்.
- ஜனநாயகமாக இருந்தாலும் சரி, வளர்ச்சியாக இருந்தாலும் சரி இன்று ஜம்மு காஷ்மீர் ஒரு புதிய எடுத்துக்காட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
- கடந்த 2-3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியின் புதிய பரிணாமங்கள் உருவாகியுள்ளன.
- இந்த ஆண்டு பஞ்சாயத் ராஜ் நாள் ஜம்மு காஷ்மீரில் கொண்டாடப்படுவது ஒரு புதிய மாற்றத்திற்கான அறிகுறி. நாட்டில் உள்ள பிற பஞ்சாயத் ராஜ் அமைப்புகளுக்கு ஜம்மு காஷ்மீரிலிருந்து நான் உரையாற்றுகிறேன் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது.
- இந்திய அரசின் சட்டங்கள் பல இங்கு அமல்படுத்தப்படாமல் இருந்தன. இங்குள்ள ஒவ்வொரு குடிமக்களின் நலனுக்காகவும் நாங்கள் அந்த சட்டங்களை அமல்படுத்தியுள்ளோம்.
- நான் 'ஏக் பாரத், ஷ்ரெஷ்தா பாரத்' என்று பேசும்போது, தூரங்களை கடந்து மக்களை ஒன்றிணைப்பதே எங்களது நோக்கமாக உள்ளது.
https://www.youtube.com/watch?v=P71dDdQ3044&t=5s
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு













Click it and Unblock the Notifications