மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சூரத் மதரஸா பள்ளி.. இந்துக்களும் இணைந்து படிக்கும் ஆச்சரியம்!
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில், ஒரு மதரஸா சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளியில் இந்து சமூக பிள்ளைகளும் அதிக அளவில் படிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது. மத நல்லிணக்கத்தை எடுத்துக் காட்டும் வகையிலான இந்த நிகழ்வு அனைவரையும் மகிழவும் வைத்துள்ளது.
இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் சூரத் நகர் பல்வேறு மத மக்கள் வாழும் நகரமாகும். இங்கு பல்வேறு விதமான மதத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இத்தனை மதத்தினர் வசித்தாலும் கூட அவர்களுக்கிடையே நல்ல நல்லிணக்கம் காணப்படுவது வியப்புக்குரியது, பாராட்டுக்குரியதாக உள்ளது.

இங்குள்ள மதரஸா சார்பில், உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் இந்து சமூக பிள்ளைகளும் சேர்ந்து படிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த பள்ளியானது, மோட்டாவரச்சா என்ற பகுதியில் உள்ளது.
இது இஸ்லாமியர்களுக்கான கல்வி நிலையமாக இருந்தபோதிலும், இங்கு இந்து சமூக பிள்ளைகளும் கணிசமாக பயில்கின்றனர். இந்தப் பள்ளியானது 1905ம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். இங்கு பல்வேறு வகையான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
அனைத்து மதங்கள் குறித்த பாடங்களும் இங்கு கற்பிக்கப்படுவது இன்னொரு சிறப்பாகும். பல்வேறு மதங்களில் காணப்படும் ஒற்றுமைகள், நல்ல விஷயங்களை இங்கு சொல்லிக் கொடுப்பது இன்னொரு முக்கிய அம்சமாகும்.
அனைத்து மதங்களையும் புரிந்து கொண்டு, மதங்கள் சொல்லும் நல்லவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இங்குள்ள பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் சொல்லித் தருவது இந்த பள்ளியின் மகத்துவமாகும்.
இதுகுறித்து வைஷாலி என்ற மாணவி கூறுகையில், இங்கு நாங்கள் இந்துக்களும், முஸ்லீம்களும் இணைந்து படிக்கிறோம். இரு மத பண்டிகைகளையும் நாங்கள் இணைந்தே கொண்டாடுவோம். இரு மத நிகழ்வுகளையும் இணைந்தே செய்வோம். ராக்கி பண்டிகையையும் சேர்ந்தே கொண்டாடுவோம்.
இந்து என்றும் முஸ்லீம் என்றும் யாரும் கிடையாது. அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்று எங்களுக்கு ஆசிரியர்கள் போதித்துள்ளனர் என்றார்.
ஹுனேனா என்ற மாணவி கூறுகையில், நாங்கள் இந்து மாணவ மாணவியருடன் இணைந்தே படிக்கிறோம். எங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை. இந்துக்களும் நம்மவர்களே என்று எங்களுக்கு ஆசிரியர்கள் போதித்துள்ளனர். எங்களுக்குள் சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்தையும் ஆசிரியர்கள் போதித்துள்ளனர். யாரும் யாரையும் பாரபட்சமாக நடத்தக் கூடாது, பரஸ்பரம் மதிக்க வேண்டு்ம் என்றும் ஆசிரியர்கள் போதித்துள்ளனர் என்றார் அவர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications