கார் விபத்து வழக்கு தீர்ப்பு: நீதிமன்றத்தில் கதறி அழுத சல்மான்கான்
மும்பை: கார் விபத்து வழக்கில் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு நீதிமன்றத்திலேயே நடிகர் சல்மான் கான் கதறி அழுதார்.
2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் சென்ற கார் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இதில் நுருல்லா மெஹ்பூப் செரிஃப் என்பவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மான் கான், மருத்துவமனை பரிசோதனைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சுமார் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று மும்பை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நடிகர் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்த நீதிபதி மது அருந்திவிட்டு சல்மான் கான் காரை ஓட்டியதும், லைசென்ஸ் இல்லாமல் காரை ஓட்டியது உள்பட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆகியுள்ளதாக கூறினார்.
மரணம் விளைவிக்கும் வகையில் மது அருந்தியது தண்டனைக்குரிய குற்றம் என்றும் நீதிபதி கூறினார். தொடர்ந்து அவர் தண்டனை விவரம் பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து நீதிமன்றம் 45 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிபதி கேள்வி
தீர்ப்பை அறிவித்த நீதிபதி சல்மான்கானைப் பார்த்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று கேட்டார்.

சல்மான் மறுப்பு
தன்மீதான குற்றத்தை மறுத்த சல்மான்கான் காரை தான் ஓட்டவில்லை என்று கூறினார்.

கதறி அழுத சல்மான்
இந்த தீர்ப்பை கேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சல்மான் கான் கதறி அழுதார். பின்னர் விரக்தியடைந்த அவர் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டார். இதனையடுத்து சல்மான் கானை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

உடல்நிலை மோசம்
தீர்ப்பை கேட்ட உடன் சல்மான்கானின் தாயாரின் உடல்நிலை மோசமானது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சங்கீதா பிஜ்லானி விரைவு
தீர்ப்பினை கேட்ட நடிகை சங்கீதா பிஜ்லானி சல்மான்கான் வீட்டிற்கு விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications