For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘ஹிட்லர்’ மோடி ‘முசோலினி’ முலாயம் கூடாநட்பே முசாபர் கலவரத்துக்கு காரணம்: பேனி பிரசாத்

Google Oneindia Tamil News

‘Hitler’ Modi, ‘Mussolini’ Mulayam are hand in glove: Beni Prasad Verma
லக்னோ: ‘ஹிட்லர்' மோடியும் ‘முசோலினி' முலாயம் சிங் யாதவும் கூட்டாளிகள், அவர்களின் கூடாநட்பே முசாபர் கலவரத்துக்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார் மத்திய இரும்புத்துறை அமைச்சர் பேனி பிரசாத்.

உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் மத்திய இரும்புத்துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா. அப்போது அவர், மோடியும் முலாயம் சிங் யாதவும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் நவீன அவதாரங்கள் எனவும், அவர்களின் கூடாநட்பே முசாபர் கலவரத்துக்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து அவர் கூறியதாவது :-

இந்திய அரசியலில் மீண்டும் ஹிட்லர் (மோடி) பிறந்துள்ளார். அதேபோல், உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஓர் முசோலினி (முலாயம் சிங் யாதவ்) பிறந்துள்ளார்.

இந்த நவீன ஹிட்லர் (மோடி) குஜராத்தை அடக்கி ஆளும் சர்வாதிகாரியாகி விட்டார். அவரை எதிர்த்து பேச முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர்.

ஆர். எஸ். எஸ். மற்றும் பா.ஜ.க.வினரும் கூட இந்த ஹிட்லரை எதிர்த்து பேசும் துணிவற்றவர்களாக உள்ளனர்.

அவரோடு கூட்டாளியாக கைகோர்த்துக் கொண்டிருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்த முசோலினி முலாயம் சிங் யாதவ், மோடியின் வழியில் சென்று குஜராத்தை போலவே முசாபர் நகர் கலவரத்துக்கு காரணமாகி விட்டார்.

மோடியுடன் ஏற்பட்ட கூடாநட்பு தான் முசாபர் நகர் கலவரத்துக்கு காரணமாகி விட்டது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Comparing BJP prime ministerial candidate Narendra Modi to Hitler and Samajwadi Party chief Mulayam Singh Yadav to Mussolini, Union steel minister Beni Prasad Verma on Sunday alleged the two leaders had a tacit understanding to polarize votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X