இந்தி பேசாத மாநிலங்களின் 30 எம்.பிக்களுக்கு இந்தி வகுப்புகள்- உள்துறை அமைச்சகம் ஏற்பாடு!
டெல்லி: இந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த 30 எம்.பி.க்களுக்கு இந்தி வகுப்புகள் எடுப்பதற்கு உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தி மொழி பேசாத தமிழகம், கேரளா, ஆந்திராம், தெலுங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 30 எம்.பி.க்களைத் தேர்ந்தெடுத்து இந்தி கற்றுத் தர இருக்கிறது மத்திய அரசு.

இதற்கான ஏற்பாடுகளை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஹெட்போன்கள் மூலம் இந்திக்கான மொழிபெயர்ப்பு வசதிகள் இருந்தும் தங்களால் பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ பேசுவதை புரிந்து கொள்ள முடியவில்லை என சில எம்.பி.க்கள் கூறி வருவதால் இந்த ஏற்பாடாம்..
இதற்காக மத்திய இந்தி பயிற்சி நிறுவனத்தின் வல்லுநர்கள் ஏப்ரல் 24 மற்றும் ஏப்ரல் 27-ந் தேதியன்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்த வகுப்புகளை நடத்த இருக்கின்றனர். இது குறித்து மத்திய இந்தி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜெய் பிரகாஷ் காதம் கூறுகையில், இந்த பயிற்சி வகுப்பு இந்தி மொழியை புரிந்து கொள்ள எளிதாக பேசுவதற்காகனது.. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றார்.
இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தாமஸ், பிஜூ ஜனதா தளத்தின் ரீடா தராய், திரிணாமுல் காங்கிரஸின் தபஸ் மண்டல், மார்க்சிஸ்ட் கட்சியின் சங்கர் தத்தா, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் வினோத் குமார் உள்ளிட்டோர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உள்துறை அமைச்சகத்தின் இந்த ஏற்பாட்டுக்கு தி.மு.க எம்.பி. கே.பி. ராமலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications