ஆம் ஆத்மிக்கு வெளிநாட்டு நிதி: உள்துறை அமைச்சகம் ஆய்வு
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டதாக எழுந்த புகார் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக ரூ.20 கோடி வசூலிப்பதே எங்கள் இலக்கு. அமெரிக்கா, பிரிட்டன், ஹாங்காங், கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சுமார் ரூ.6 கோடி வழங்கியுள்ளனர்.

நாங்கள் இந்தியர்களிடம் இருந்து மட்டுமே நன்கொடை பெறுகிறோம். வேறு யாரிடம் இருந்தும் பெறுவதில்லை. சில வெளிநாட்டவர்கள் நன்கொடை கொடுக்க விரும்பிய போது மறுத்து விட்டோம் என அக்கட்சியின் தேசிய செயலர் மற்றும் நிதி, நன்கொடைப் பிரிவு பொறுப்பாளருமான பங்கஜ்குப்தா கூறியிருந்தார்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அக்கட்சி தேர்தல் நேரத்தில் பெற்ற வெளிநாட்டு நிதி குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. வெளிநாட்டு நிதி பற்றிய ரசீது, கணக்கு விவரங்கள் ஆய்வு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications