For Daily Alerts
Just In
பெங்களூர் கலவரம்.. கர்நாடகத்திடம் மத்திய அரசு அறிக்கை கேட்கிறது
டெல்லி: பெங்களூர் கலவரம் தொடர்பாக கர்நாடக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
காவிரி நீர் வெளியேற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த புதிய உத்தரவைத் தொடர்ந்து பெங்களூரில் பெரும் கலவரம் மூண்டது. தமிழர்களின் வாகனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்களைக் குறி வைத்து தாக்கினர் வன்முறையாளர்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட் பஸ்கள், லாரிகள், கார்கள் என வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
பெங்களூர் நகர் முழுவதும் அசாதாரண நிலை நிலவியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் பெங்களூர் நிலவரம் குறித்து கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நாளை பெங்களூரில் நடைபெறவுள்ள கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து அறிக்கை அனுப்படும் என்று தெரிகிறது.
Comments
English summary
Union Home ministry has sought a report from Karnataka govt on the Bangaluru status.
Story first published: Monday, September 12, 2016, 21:23 [IST]