சிபிஐ நடவடிக்கையில் தலையிட்ட, உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி அதிரடி நீக்கம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சாரதா நிதிநிறுவன ஊழல் வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் மாதங் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி தலையிட்டதாகவும், மதங் சிங்கை கைது செய்யும் நடவடிக்கையை கைவிடும்படி சி.பி.ஐ.யிடம் கூறியதாகவும் தகவல் வெளியானது. சி.பி.ஐ.யிடம் பேசியதை அவரும் ஒப்புக்கொண்டார்.

Home Secretary Anil Goswami sacked

இதையடுத்து, மாதங் சிங் விவகாரத்தில் தலையிட்டதாகக் கூறி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அனில் கோஸ்வாமிக்கு பிரதமர் அலுவலகம் சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் பதவியில் இருந்து அனில் கோஸ்வாமி நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக அனில் கோஸ்வாமியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுமார் ஒரு மணி நேரம் பேசினார். இதேபோல் சி.பி.ஐ. இயக்குனர் அனில் சின்காவிடமும், இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து பிரதமர் மோடியை சந்தித்த ராஜ்நாத் சிங், இப்பிரச்சினை குறித்து விளக்கம் அளித்தார். இதனிடையே டிஸ்மிஸ் செய்யாமல், ராஜினாமா கடிதத்தை கேட்டு எழுதி பெற்றதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+