ஓரினச் சேர்க்கை வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஓரினச்சேர்க்கை தொடர்பான மறு சீராய்வு மனுவை 5 நீதிபதிகள் கொண்ட வேறு அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓரினச்சேர்க்கை உறவை கிரிமினல் குற்றமாக உச்ச நீதிமன்றம் அறிவித்ததற்கு எதிராக தன்னார்வ தொண்டு நிறுவனம், ஓரினச்சேர்க்கை உறவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலிருந்து 8 மறு சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை இன்று நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், அனில் ஆர்.தவே, ஜெகதீஷ் சிங் கேஹார் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, மறுசீராய்வு மனுவை 5 நபர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்தது. இதைத் தொடர்ந்தே இந்த மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் தடையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி நாஷ் பவுண்டேஷன் எனும் தனியார் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.












Click it and Unblock the Notifications