நவாஸ் ஷெரீப்பின் இந்திய வருகை- புதிய தொடக்கம்: காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இந்திய வருகைக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மே 26-ந் தேதி நடைபெறும் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர்

நவாஸ் ஷெரீப் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளதாவது:
எனக்கு ஜனாதிபதியிடமிருந்து பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு வந்துள்ளது. மோடியும் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விழாவில் நான் நிச்சயம் பங்கேற்பேன்.
பாகிஸ்தான் பிரதமர், அழைப்பை ஏற்று இந்தியா வர சம்மதிருப்பதை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது இரு நாடுகளூக்குமான உறவில் புதிய தொடக்கமாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் மக்கள் இதை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
இவ்வாறு ஒமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications