ரொம்ப ரேர் கேஸ்! அது எப்படி 3 ரயில் அடுத்தடுத்து விபத்துக்கு உள்ளாகும்? ஒடிசா காட்டில் நடந்தது என்ன?
புவனேஷ்வர்: ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்து உள்ளாகி இருக்கிறது. இந்திய வரலாற்றில் பல கோர ரயில் விபத்துகள் நடந்து இருந்தாலும் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றின் மேல் ஒன்று மோதுவது இதுவே முதல்முறை.
இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.
இந்த தகவல் காட்டு பகுதி என்பதால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போன் மூலமும்,யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பாதையில் செல்லும் ரயில்கள் எதையும் தடுக்க முடியவில்லை.
இந்த நேரத்தில்தான் சிறிது நேரம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.

இதே பாதையில் வந்த இன்னொரு சரக்கு ரயிலும் அடுத்த சில நிமிடங்களில் பின்னால் மோதி தடம் புரண்டு உள்ளன. இந்த விபத்தில் 70 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 200 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 300 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
முதல்முறை : இந்திய வரலாற்றில் பல கோர ரயில் விபத்துகள் நடந்து இருந்தாலும் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றின் மேல் ஒன்று மோதுவது இதுவே முதல்முறை. அங்கே அடுத்தடுத்து இப்படி 3 ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாக பின்வரும் விஷயங்கள் காரணமாக பார்க்கப்படுகின்றன.
காரணம் 1 - தகவல் இல்லை - கோரமண்டல் ரயில் தடம் புரண்டது குறித்த தகவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. காட்டு பகுதி என்பதால் சிக்னல் இல்லை. இதனால் அதிகாரிகளுக்கு விவரம் தெரியவில்லை.
காரணம் 2 - இதனால் அடுத்தடுத்து ரயில்கள் வேகமாக வந்து மோதி உள்ளன. கடைசியாக சரக்கு ரயில் மோதும் வரை அங்கே இப்படி ஒரு விபத்து நடந்ததே யாருக்கும் தெரியாது.
காரணம் 3 - காட்டு இருள்: முதல் ரயில் விபத்துக்கு உள்ளான பின் அங்கே கடும் இருள் நிலவி உள்ளது. இதனால் அடுத்தடுத்து வந்த ரயில்களுக்கு அங்கே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இது விபத்து ஏற்பட முக்கிய காரணம்.
காரணம் 4 - அங்கே கோரமண்டல் ரயிலில் மோதிய யஷ்வந்த்பூர் ரயில் அதிவேக எக்ஸ்பிரஸ் என்பதால் வேகமாக வந்துள்ளது. இதனால் அதன் ஓட்டுனர் ஏற்கனவே தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகளை பார்த்து இருந்தாலும் கடைசி நேரத்தில் பிரேக் பிடித்து இருக்க முடியாது.
தெரியாத காரணம் - முதலில் தடம் புரண்ட கோரமண்டல் ரயில் ஏன் தடம் புரண்டது என்பது விசாரணைக்கு பின்பே தெரிய வரும். இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications