ரொம்ப ரேர் கேஸ்! அது எப்படி 3 ரயில் அடுத்தடுத்து விபத்துக்கு உள்ளாகும்? ஒடிசா காட்டில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்து உள்ளாகி இருக்கிறது. இந்திய வரலாற்றில் பல கோர ரயில் விபத்துகள் நடந்து இருந்தாலும் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றின் மேல் ஒன்று மோதுவது இதுவே முதல்முறை.

இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.

இந்த தகவல் காட்டு பகுதி என்பதால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போன் மூலமும்,யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பாதையில் செல்லும் ரயில்கள் எதையும் தடுக்க முடியவில்லை.

இந்த நேரத்தில்தான் சிறிது நேரம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.

How come three trains meet with an accident one by one in Odisha?

இதே பாதையில் வந்த இன்னொரு சரக்கு ரயிலும் அடுத்த சில நிமிடங்களில் பின்னால் மோதி தடம் புரண்டு உள்ளன. இந்த விபத்தில் 70 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 200 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 300 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

முதல்முறை : இந்திய வரலாற்றில் பல கோர ரயில் விபத்துகள் நடந்து இருந்தாலும் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றின் மேல் ஒன்று மோதுவது இதுவே முதல்முறை. அங்கே அடுத்தடுத்து இப்படி 3 ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாக பின்வரும் விஷயங்கள் காரணமாக பார்க்கப்படுகின்றன.

காரணம் 1 - தகவல் இல்லை - கோரமண்டல் ரயில் தடம் புரண்டது குறித்த தகவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. காட்டு பகுதி என்பதால் சிக்னல் இல்லை. இதனால் அதிகாரிகளுக்கு விவரம் தெரியவில்லை.

காரணம் 2 - இதனால் அடுத்தடுத்து ரயில்கள் வேகமாக வந்து மோதி உள்ளன. கடைசியாக சரக்கு ரயில் மோதும் வரை அங்கே இப்படி ஒரு விபத்து நடந்ததே யாருக்கும் தெரியாது.

காரணம் 3 - காட்டு இருள்: முதல் ரயில் விபத்துக்கு உள்ளான பின் அங்கே கடும் இருள் நிலவி உள்ளது. இதனால் அடுத்தடுத்து வந்த ரயில்களுக்கு அங்கே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இது விபத்து ஏற்பட முக்கிய காரணம்.

காரணம் 4 - அங்கே கோரமண்டல் ரயிலில் மோதிய யஷ்வந்த்பூர் ரயில் அதிவேக எக்ஸ்பிரஸ் என்பதால் வேகமாக வந்துள்ளது. இதனால் அதன் ஓட்டுனர் ஏற்கனவே தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகளை பார்த்து இருந்தாலும் கடைசி நேரத்தில் பிரேக் பிடித்து இருக்க முடியாது.

தெரியாத காரணம் - முதலில் தடம் புரண்ட கோரமண்டல் ரயில் ஏன் தடம் புரண்டது என்பது விசாரணைக்கு பின்பே தெரிய வரும். இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+