பணமதிப்பிழப்பிற்கு பின் 500, 2000 ரூபாய் கள்ளநோட்டு அடிப்பது அதிகமாகி உள்ளது.. ஆர்பிஐ அதிர்ச்சி!
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2000, 500 ரூபாய் கள்ளநோட்டுகள் அடிப்பது அதிகமாகி உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2000, 500 ரூபாய் கள்ளநோட்டுகள் அடிப்பது அதிகமாகி உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
2016 வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் தற்போது எந்த விதமான பலனும் ஏற்படவில்லை என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 99.3 சதவிகித நோட்டுகள் மீண்டும் வந்துவிட்டது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

அளித்த வாக்குறுதி என்ன?
இந்த புதிய ரூபாய் நோட்டுகளில், சிப் இருக்கிறது, இதனால் கருப்பு பணம் ஒழியும் என்று நிறைய பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் அதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று சில நாட்களுக்கு உள்ளாகவே எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஆனால், இதனால் கள்ளநோட்டு அச்சடிப்பது குறையும், இதனால் தீவிரவாதிகள் கஷ்டப்பட போகிறார்கள் என்று பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதிகம் ஆகியுள்ளது
அந்த அளவிற்கு இந்த ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மாறாக கள்ளநோட்டு அடிப்பது இப்போதுதான் அதிகம் ஆகியுள்ளது. ஆம், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் சென்ற ஆண்டை விட அதிக அளவில் கள்ளத்தனமாக அடிக்கப்படுகிறது. மாறாக 100 ரூபாய் கள்ள நோட்டுகள் அடிப்பது அடியோடு குறைந்து போய் உள்ளது.

எவ்வளவு அதிகம்
500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் கள்ளத்தனமாக அடிக்க எளிதாக இருப்பதால் இப்படி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மொத்தம் 17,929 எண்ணிக்கையிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் இந்த வருடம் அடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மதிப்பு 35858000 ரூபாய் ஆகும். இது சென்ற ஆண்டை விட 2710 சதவிகிதம் அதிகம் ஆகும். சென்ற வருடம் 638 எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அடிக்கப்பட்டு இருக்கிறது.

500 ரூபாய் நோட்டுகள்
அதேபோல் 500 ரூபாய் நோட்டுகள் அடிப்பதும் கணிசமாக அதிகரித்துள்ளது. 9,892 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இந்த வருடம் அடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மதிப்பு 4946000 ரூபாய் ஆகும். இது சென்ற ஆண்டை விட 4178 சதவிகிதம் அதிகம் ஆகும். சென்ற வருடம் 199 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அடிக்கப்பட்டு இருக்கிறது.
-
அய்யோ.. அக்கவுண்டில் அநாமத்தாக வந்த 10 கோடி! ஒரே நொடியில் கோடீஸ்வரியான பெண்! உடனடியாக எடுத்த முடிவு -
உங்க அசல் ஆவணம் வங்கியில பத்திரமா இருக்கா? கோவையில் பகீர்.. 13 லட்சம் அபராதம் தந்த கோர்ட் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications