ஒரு கிழிந்த புளூடூத் இயர்போன்.. கொல்கத்தா பலாத்கார கொடூரன் சிக்கியது எப்படி? வெளியான ஷாக் தகவல்
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த பெண் பலாத்கார சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் கொலைகாரன் சஞ்சய் ராய் எப்படி பிடிபட்டான் என்பது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவின் RG Kar மருத்துவக் கல்லூரியில் நடந்த பலாத்கார சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. அங்கே இரண்டாம் ஆண்டு முதுகலை பயிற்சி மருத்துவரான பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

அந்த 31 வயது பெண் தனது ஜூனியர்களுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, அதிகாலை 2 மணிக்கு சிறிது ஓய்வெடுக்க முடிவு செய்து உள்ளார். செமினார் ஹாலில் ஓய்வெடுத்த போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்..
எப்படி சிக்கினான் கொலைகாரன்: காலை 3 மணியில் இருந்து 5 மணி வரை இந்த சம்பவம் நடந்து உள்ளது. அதாவது பெண் தூங்க சென்ற 30 - 40 நிமிடங்களில் பின்னாடியே தொடர்ந்து சென்று இப்படி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை கைது செய்துள்ளனர்.ராயின் கடந்தகால நடத்தை, முந்தைய திருமண வாழ்க்கையில் மனைவியை கொடுமை செய்தது மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்த்தது ஆகியவை அவருக்கு மனநல ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்.
இவர் அங்கே தன்னார்வலராக போலீஸார் உடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவர் வெறும் தன்னார்வலர்தான். ஆனால் போலீஸ் குழுக்களில் இருக்கிறார், அங்கே கிடைத்த காண்டாக்ட் மூலம் போலீஸ் கமிட்டி ஒன்றிலும் கூட கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.
கிழிந்த புளூடூத் இயர்போன் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். இவர் அந்த பளூடூத் ஹெட் செட் உடன் அங்கே சுற்றியதை பலரும் பார்த்து உள்ளனர். இதன் மூலமே அவர் சிக்கி உள்ளார். மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடனான தொடர்பு காரணமாக ராய் பல்வேறு மருத்துவமனை துறைகளுக்கு சென்று பல்வேறு பணிகளை செய்துள்ளார். இது போன்ற ஒரு வாய்ப்பிற்காக அவர் இத்தனை காலம் காத்து இருந்ததாக கூறப்படுகிறது.
ஷாக்கிங் தகவல்கள்: அவரின் பெண் உறுப்பில் 150 mg விந்தணு இருந்துள்ளது. இதன் அர்த்தம் இந்த சம்பவத்தை தனி ஆள் செய்திருக்க முடியாது.
அங்கே உள்ளே மாணவர்கள் சந்தேகிப்பது.. ஒரு ஆள் செய்யவில்லை, அப்போது ஷிப்டில் இருந்த சிலரும் இதை செய்துள்ளனர். அந்த பெண் உணவிற்கு பின் அதீதமாக தூக்கம் வந்ததாக கூறியுள்ளார். அவரின் உணவில் இவர்கள் எதையாவது கலந்து இருக்கலாம்.. திட்டமிட்டே இதை எல்லாம் செய்து இருக்கலாம் என்று நம்மிடம் கூறி உள்ளனர்.
உடலில் பல காயங்கள் உள்ளன.. அந்த பெண்ணின் கண்ணாடி உடைந்து இரண்டு கண்களில் குத்தி உள்ளது. இதனால் கண்களில் ரத்தம் இருந்துள்ளது. காதுகளில் அடிக்கப்பட்ட நிலையில் அங்கேயும் ரத்தம் உள்ளது. உதடுகள் கிழிந்து ரத்தம் வந்துள்ளது. அந்த பெண்ணின்.. இரண்டு கால்களும் உடைந்து உள்ளன. 90 டிகிரிக்கு கால்களை கொண்டு செல்லும் அளவிற்கு உடைத்து உள்ளனர்.
இதெல்லாம் நடக்கும் போது அந்த பெண் கத்த கூடாது என்பதால் அந்த பெண்ணின் தொண்டையை உடைத்து உள்ளனர். அதேபோல் கழுத்தில் உள்ள தைராய்டு கேலண்டு உடைக்கப்பட்டு உள்ளது. கால்கள் உடைக்கப்பட்ட போது, தலையின் பின்புறம் தாக்கப்பட்ட போது அந்த பெண் மரணம் அடைந்து உள்ளார்.












Click it and Unblock the Notifications