வெறுங்கையோடு வந்த சோனியா உலகின் 6வது பணக்கார பெண்மணியானது எப்படி? கேட்பது மேனகா
Subscribe to Oneindia Tamil

உ.பி.யின் பிலிபித் தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்த போது பேசியதாவது:
திருமணமான புதிதில் இந்தியாவுக்கு வந்த சோனியா நகை பணம் எதுவும் கொண்டுவரவில்லை சோனியா காந்தி. வெறுங்கையோடு வந்த சோனியா இப்போது உலகின் 6வது பணக்கார பெண்மணியாக உருவெடுத்தது எப்படி?
அவர் இந்தியாவுக்கு வந்த போது இந்த நாட்டு மக்கள் அன்பை மட்டுமே பொழிந்தார்கள். ஆனால் மேற்கத்திய ஊடகங்களோ சோனியாவை உலகின் 6 வது பணக்கார பெண்மணியாக உருவானது எப்படி? இவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போலீசாரின் லத்திகளுக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்த 'சாதனையை' முறியடித்து நாட்டையே நிர்மூலமாக்கிவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications