ஆசாராம் பாபு ஜாலியாக இருக்க பெண்களை எப்படி தேர்வு செய்வார் தெரியுமா?
டெல்லி: மத குருவான ஆசாராம் பாபு பெண்களை எப்படி தேர்வு செய்வார் என்று அவரின் முன்னாள் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார் மதகுருவான ஆசாராம் பாபு. தனது ஆசிரமத்தில் தங்கிப் படித்த 16 வயது சிறுமியிடம் அவர் தவறாக நடந்ததால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆசாராம் பாபு பற்றி அவரின் முன்னாள் உதவியாளர் மகேந்திர சாவ்லா பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார். சாவ்லா கடந்த 2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஆசாராமின் உதவியாளராக இருந்துள்ளார்.

போதை அடிமை
74 வயதாகும் ஆசாராம் பாபு போதைப் பொருளுக்கு அடிமையாம். அவரால் ஓபியம் சாப்பிடாமல் இருக்க முடியாதாம். வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தான் அவருக்கு ஓபியம் சப்ளை செய்து வந்துள்ளார்.

நாராயண் சாய்
ஆசாராம் பாபுவின் மகன் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி வருகிறார். ஆனால் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதாக சாவ்லா தெரிவித்துள்ளார்.

டார்ச் அடித்து
ஆசாராம் பாபு தான் ஜாலியாக இருக்க பெண்களை எப்படி தேர்வு செய்வார் என்பதையும் சாவ்லா தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்த பெண் மீது ஆசாராம் பாபு பழம் அல்லது பிரசாதத்தை வீசுவாராம். அல்லது அந்த பெண் மீது டார்ச் லைட்டை அடிப்பாராம். இப்படி தான் அவருக்கு பிடித்த பெண்களை அவர் தேர்வு செய்துள்ளார்.

மருத்துவச்சி ஏன்?
ஆசாராம் பாபுவின் உடல் நலனை பெண் மருத்துவர் தான் கவனிக்க வேண்டுமாம்.

கொலை மிரட்டல்
நாராயண் சாய் சாவ்லாவை ஒரு முறை அடித்து நொறுக்கி வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ளார். அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் சாய்.

சூனியம்
நாராயண் சாய் பிணங்களை வைத்து சூனியம் செய்ததை தான் 3 முறை பார்த்ததாக சாவ்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications