பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவு.. இந்தியா கண்டுபிடித்த புதிய கோள்.. எப்படி சாத்தியமானது!
இந்திய வரலாற்றில் முதல்முறையாக நேற்று இந்திய விஞ்ஞானிகள் புதிய கோள் ஒன்றை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளனர்.
Recommended Video

அஹமதாபாத்: இந்திய வரலாற்றில் முதல்முறையாக நேற்று இந்திய விஞ்ஞானிகள் புதிய கோள் ஒன்றை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் கோள்களை கண்டுபிடித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஆனால் இந்த அசாத்திய கண்டுபிடிப்பை நிகழ்த்தியது இஸ்ரோ கிடையாது, தனியார் நிறுவனம் ஒன்று.
அஹமதாபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று பூமியை போலவே இருக்கும் கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.அபிஜித் சக்ரபோர்த்தி என்பவரின் தலைமையில் இயங்கும், பிஆர்எல் என்ற குழு இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

பெயர் என்ன
இந்த புதிய கிரகம் EPIC 211945201 என்று சூரிய குடும்பத்தில் உள்ளது. இந்த சூரிய குடும்பத்தில் இந்த கிரகம் மட்டுமே உள்ளது. இந்த கிரகத்திற்கு EPIC 211945201b என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

வேகம்
பார்க்க பூமி போல இருந்தாலும் பூமியை விட 10 மடங்கு எடை அதிகமாக உள்ளது. இதை சுற்றி 600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் இங்கு உயிரினம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் பூமியை விட 27 சதவிகிதம் பெரிதாக இருக்கும். இது அதன் சூரியனை சுற்ற வெறும் 19.5 நாட்கள்தான் ஆகும். அதாவது பூமியில் 19.5 நாளில், அந்த கோள் அதன் சூரியனை சுற்றிவிடும்.

ஒளி
இந்த கோளை கண்டுபிடிக்க நாசா மறைமுகமாக உதவி இருக்கிறது. நாசா தற்போது கெப்ளர் என்ற செயற்கைக்கோளை, புதிய கோள்களை கண்டுபிடிக்க விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் இந்த செயற்கைகோள் கண்டுபிடிக்காத, கிரகத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் முதலில் EPIC 211945201 சூரியனை கண்டுபிடித்துள்ளது. அதில் ஏற்படும் ஒளி மாற்றங்களை வைத்து அதற்கு கோள் இருப்பதை நம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சோதனை
இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக ராஜஸ்தானில் பெரிய தொலைநோக்கி ஒன்றுள்ளது. 1.2எம் திறன் கொண்ட இந்த தொலைநோக்கி ராஜஸ்தானில் அபு என்ற இடத்தில் உள்ளது. இதை வைத்து கடந்த ஒரு மாதமாக அந்த கோளை ஆராய்ந்து, அது நட்சத்திரம் இல்லை, பூமியை போலவே இருக்கும் கோள்தான் என்று கண்டுபிடித்துள்ளனர்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications