ஜெயலலிதாவால் பா.ஜ.க.வில் 'தண்ணி தெளித்துவிடப்படும்' சு.சுவாமி
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அ.தி.மு.க. தொண்டர்கள் எத்தனை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்களோ கிட்டத்தட்ட அதே மனநிலையில்தான் பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் இருக்கின்றனர்.. இதனால்தான் ஜெயலலிதாவை வரிசை கட்டிக் கொண்டு அவர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்... இப்படி ஜெயலலலிதாவுடன் பாரதிய ஜனதா தலைவர்கள் நெருக்கம் காட்டுவதால் சொத்துக் குவிப்பு வழக்கை கையிலெடுத்துக் கொண்டு நீதிமன்றப் படிகளேறும் சுப்பிரமணியன் சுவாமி அக்கட்சிக்குள்ளேயே தண்ணி தெளித்துவிடப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

லோக்சபாவில் பெரும்பான்மையாக இருந்தாலும் ராஜ்யசபாவில் சிறுபான்மையாக இருக்கும் தங்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு தேவை என்பதை பாரதிய ஜனதா மேலிடம் உணர்ந்தே செயல்பட்டு வருகிறது. இதனால்தான் அ.தி.மு.க.வை விமர்சிப்பதை விட நெருக்கம் பாராட்டுவதில் மும்முரமாக இருக்கிறது பா.ஜ.க.
தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் என்னதான் விமர்சித்தாலும் அதை அண்ணா தி.மு.க. மேலிடமும் கண்டுகொள்வதில்லை.. பா.ஜ.க.வும் கவலைப்படுவதில்லை.. இதனை பகிரங்கப்படுத்தும் வகையில்தான் ஜெயலலிதா விடுதலையான உடன் பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் ஜெயலலிதாவை வாழ்த்தினர்.
அதே நேரத்தில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்கு காரணமாக இருந்த சுப்பிரமணியன்சுவாமியோ, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று சொல்லியிருந்தார்.. உண்மையில் அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுதான் அதிர்ச்சியாக இருந்திருக்க முடியும்..
அதனால்தான் ஜெயலலிதாவை விடுதலை செய்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில் அப்படி ஒரு பம்மோ பம்மென பதுங்கினார் சுவாமி. ஏனெனில் ஜெயலலிதாவை எதிர்த்து முன்னைப் போல தீவிரமாக போராடினால் இப்போது பாரதிய ஜனதாவில் இருக்கும் நண்பர்கள் பலரும் எதிரிகளாகிவிடக் கூடும்.. அப்படியே தன்னை தண்ணிதெளித்து அனாதையாக்கிவிடுவார்கள் என்ற அச்சம் சுப்பிரமணியன் சுவாமிக்கு இருக்கவே செய்யும்...
இதனாலேயே மிகவும் உஷாராக ஜெயலலிதா விவகாரத்தில் பதுங்கிக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications