லோக்சபா தேர்தல்: பீகார், ஜார்க்கண்ட்டில் வாலை சுருட்டிக் கொண்ட மாவோயிஸ்டுகள்
பாட்னா/ராஞ்சி: தேர்தல்களின் போது வன்முறைகளில் ஈடுபடும் மாவோயிஸ்டுகள் இம்முறை பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் எந்த அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என்பது ஆறுதலைத் தருகிறது.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் ஜார்க்கண்ட், பீகாரும் முக்கியமானவை. பீகாரின் 38 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் கை ஓங்கிருப்பது 26-ல். கடந்த 5 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகளின் வன்முறை இங்கே கணிசமாக குறைந்திருக்கிறது.

முதல் கட்ட வாக்குப் பதிவில் பீகாரின் கயா, அவுரங்காபாத், நவடா மற்ரும் ஜாமுய் ஆகிய மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட இடங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் எந்த ஒரு வன்முறையும் இல்லாமல் இங்கு சுமூகமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தனைக்கும் மாவோயிஸ்டுகளால் கயா, ஜெகனாபாத், அவுரங்காபாத், போஜ்பூர் ஆகியவை பல ஆண்டுகளாக பெருந்துயரத்தை அனுபவித்தவை.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 19 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 29-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற பாலமு, லோஹர்டாகா மற்றும் சத்ரா ஆகியவை மாவோயிஸ்டுகளின் வன்முறைகளால் ரத்த பூமியாக சிவந்தவை. இம்முறை மாவோயிஸ்டுகள் எந்த வன்முறையும் நடத்தவில்லை. இதனால் அங்கும் சுமூகமாக தேர்தல் நடைபெற்றது.
மாவோயிஸ்டுகள் சரணடைந்தால் அரசு நிதி உதவி வழங்கப்படும் என்கிற அறிவிப்பு மிகப் பெரிய அளவில் உதவி இருக்கிறது. அதேபோல் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீரமுடன் வேட்டையாடி வருவதும் அவர்கள் வாலை சுருட்ட பிரதான காரணம் என கூறப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications