'குற்றவாளி' சசிகலாவின் பெங்களூரு சிறை அட்டகாசங்கள்... விதிமுறைகளை காலில்போட்டு மிதித்தது அம்பலம்!
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சசிகலா விதிமுறை மீறி அட்டகாசம் செய்து வருவது அம்பலமாகியுள்ளது. தம்மை அரசியல்வாதி என கூறிக் கொண்டு விதிகளை துவம்சம் செய்து வருகிறாராம் சசிகலா.
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கின் குற்றவாளி சசிகலா பெங்களூரு சிறை விதிகளை காலில் போட்டு மிதித்து துவம்சம் செய்து வருவது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அம்பலமாகியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டவர் சசிகலா. பெங்களூரு சிறையில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.
குற்றவாளி சசிகலா சிறைக்கு போனது முதலே தமக்கு ஏகத்துக்கும் சலுகைகள் வழங்க அனுமதி கோரினார். அட்டாச் பாத்ரூம், கட்டில், வீட்டு உணவு என சிறைக்குள் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க நினைத்தார் சசிகலா. ஆனால் சிறை நிர்வாகம் இவற்றுக்கு அனுமதி தரவில்லை.

சசி அரசியல்வாதியாம்
அதேநேரத்தில் தம்மை அரசியல்வாதி என கூறிக் கொண்டு கட்சி தொண்டர்களை அனுமதிக்க வேண்டும் என அடம்பிடித்து வருகிறார் சசிகலா. சிறைவிதிகளின்படி ஒரு மாதத்துக்கு 2 பார்வையாளர்கள்தான் சசிகலாவை சந்திக்க முடியும்.

சிறைவிதிகள் துவம்சம்
ஆனால் இந்த சிறைவிதிகள் தற்போது சசிகலாவால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன என்பதை சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விவரங்களைப் பெற்று அம்லப்படுத்தியுள்ளார். சசிகலா 31 நாட்களில் 19 பார்வையாளர்களை சந்தித்திருக்கிறராம்.

நடராஜன்
மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நடராஜன்தான் அதிக முறை குற்றவாளியான மனைவி சசிகலாவை அடிக்கடி சிறையில் சந்தித்துள்ளார். அதேபோல் வழக்கறிஞர்களும் சசிகலாவை அடிக்கடி சிறையில் சந்தித்து பேசியுள்ளனர்.

யார் யார்?
இவர்கள் அல்லாமல் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, டிடிவி தினகரன், அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் வளர்மதி, கோகுல இந்திரா, சிஆர் சரஸ்வதி ஆகியோரும் சசிகலாவை சந்தித்துள்ளனர். அதேபோல் மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலா உறவினர்கள் என்ற போர்வையிலும் பலரும் சந்தித்துள்ளனராம்.

உரிய நடவடிக்கை தேவை
இப்படி சிறைவிதிகளை துவம்சம் செய்து வரும் சசிகலாவுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கர்நாடகா காவல்துறை தலைவருக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி. சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனவும் நரசிம்மமூர்த்தி எச்சரித்துள்ளார்.
அடங்காத ஆட்டம்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications