வெறும் 10 நாட்களுக்கு முன் உருவான நிறுவனம்.. ரபேல் டீலில் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் வந்தது எப்படி?!
ரபேல் ஒப்பந்தத்திற்காக ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் திடீர் என்று உருவாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்தத்திற்காக ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் திடீர் என்று உருவாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் என்று பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்து இருக்கிறார். அவரின் இந்த குற்றச்சாட்டு உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.
இந்த ரபேல் ஊழல் பாஜக மேல் தொங்கும் கத்தியாக உருவெடுத்துள்ளது. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அந்த கட்சியினர் திணறி வருகிறார்கள்.

ரிலையன்ஸ் சேர்ந்தது
பிரதமர் மோடி 2015 ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில்தான் பிரான்ஸ் சென்றார். அப்போதுதான் பிரான்ஸின் அப்போதைய அதிபர் ஹாலண்டேவுடன் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பிரான்ஸ் ஆவணங்களில் அடிப்படையில், அந்த சந்திப்பில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானியும் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த சந்திப்பிற்கு பின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

திடீர் என்று உருவாக்கப்பட்டது
இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் என்று பதிவு செய்யப்பட்ட ரிலையன்ஸ் குழும நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது 2015ல் தான். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் ரபேல் ஒப்பந்தத்திற்கு பத்து நாட்களுக்கு முன்புதான் மார்ச் 23, 2015ல் இந்த நிறுவனம் திறக்கப்பட்டு இருக்கிறது. அதாவது பிரதமர் மோடியுடன் அனில் அம்பானி சென்று ஒப்பந்தம் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன் இந்த நிறுவனம் வானத்தில் இருந்து புதிதாக குதித்து இருக்கிறது.

எவ்வளவு ரூபாய்
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இதற்காக அப்போது வெறும் 5 லட்சம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. அதாவது அவசர அவசரமாக வெறும் 5 லட்சம் முதலீட்டில் ஒரு நிறுவனம் வேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பின் அந்த நிறுவனம் ரபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இடம் பெற்றுள்ளது.

ஒப்பந்தத்தை கொடுத்து இருக்கிறார்கள்
இதில் சோகமான விஷயம் கடைசியில் இந்த புதிய கத்துக்குட்டி நிறுவனத்திற்குத்தான் ரபேல் ஒப்பந்தம் கிடைக்கிறது. அதாவது ரபேல் விமானங்களை பராமரிப்பது, உதிரி பாகங்களை வைத்து புதிய விமானம் உருவாக்குவது, ரபேல் தொழில்நுட்பத்தை பெறுவது ஆகியவை இந்த 10 நாள் வயது நிரம்பிய ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி முடியும்
ஆனால் இந்த துறையில் பழம் தின்று கொட்டை போட்ட டிஆர்டிஓ மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகள் நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு கூட இதிலிருந்து அதிகாரிகள் அழைத்து செல்லப்படவில்லை. வெறும் 10 நாள் மட்டுமே ஆன நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு அளிக்க சொல்லி இருப்பது ஏன் என்று கேள்விக்குத்தான் இன்னும் பதில் கிடைக்காமல் இருக்கிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications