கருப்பை வெள்ளையாக்க பண முதலைகள் பயன்படுத்தும் யுக்திகள் இவைதான்! சில பளிச் உண்மைகள்
டெல்லி: புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல வழிகளில் பணம் வெள்ளையாக மாற்றப்படுகிறது.
கருப்பு பணம் பெருமளவில் ரூ.500, 1000 நோட்டுக்களாகவே உள்ளதால் அவற்றை மத்திய அரசு தடை செய்தது. புதிய ரூபாய் நோட்டுக்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
எனவே பழைய ரூபாய் நோட்டுக்களை தக்க வருவாய் ஆதாரங்களுடன் டெபாசிட் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி செய்ய முடியாத கருப்பு பண பதுக்கல்காரர்கள் அதை வேறு வகையில், வெள்ளையாக்க முயற்சி செய்கிறார்கள்.
அதில் முதலிடம் பிடிப்பது பண லாண்டரிங் நடைமுறையாகும்.

மணி லாண்டரிங்
மணி லாண்டரிங் நடைமுறைப்படி, பணத்தின் உரிமையாளர் அந்த பணத்தை வேறு நபர்கள் மூலம், பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்து அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்வார். வங்கியில் அதிகம் ரொக்கம் இருப்பு இல்லாத நபர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு இந்த பணம் திரும்பி வருவது வழக்கம். சட்டப்படியான வருவாயாக காட்டிக்கொள்ள போலி நிறுவனங்கள் மூலம் லாபம் கிடைத்ததாக காட்டுவதும் உண்டு.

ஆபரணம்
கருப்பு பண முதலைகளை பணமாக சேமித்து வைக்காமல் வைரம் அல்லது தங்கமாகவும் பதுக்கி வைத்துள்ளனர். இவர்களின் முதல் சாய்ஸ் வைரம்தான். ஏனெனில் அதை சேமித்து வைக்க அதிக இடம் தேவைப்படாது.

ஹவாலா
இதேபோல ஹவாலா முறையிலும் பணம் வெள்ளையாக்கப்படுகிறது. மொரீசியஸ் நாட்டில் கம்பெனி இருப்பதாக பொய் கணக்கு காட்டி ஹவாலா முறையில் பணத்தை பெறும் கருப்பு பண முதலைகள் நமது நாட்டில் அதிகம்.

பினாமி சொத்து
நம்பிக்கையான வேறு நபர்கள் பெயர்களில் சொத்துக்களை வாங்கிப்போடுவது பினாமி நடைமுறையாகும். ஒருவரே அதிகம் சொத்துக்களை வாங்கினால் கணக்கு காட்ட வேண்டிவரும் என்பதால் இப்படி பினாமி பெயர்களில் சொத்துக்கள் சேர்க்கப்படுகின்றன.

தப்பிக்கும் வணிகர்கள்
நமது நாட்டின் வர்த்தகம் பெரும்பாலும் பணத்தின் மூலமே நடக்கிறது. இதனால், வணிகம் செய்வோர் பெருமளவுக்கு வரி கட்டாமல் தப்பிவிடுகிறார்கள். மாத ஊதியம் பெறுவோர்தான் கண்டிப்பாக வரி கட்டும் நிலையில் உள்ளனர். வணிகர்களும் வரி கட்ட ஆரம்பித்தால் மாத சம்பளக்காரர்கள் மீதான அழுத்தம் குறைய வாய்ப்பு ஏற்படலாம்.

பணம் படுத்தும் பாடு
இந்திய பொருளாதாரத்தில் பணத்தின் பங்களிப்பு ரூ.17,54,000 கோடியாக உள்ளது. இதில் 50 ரூபாய் நோட்டுக்கள் 45 சதவீத மதிப்பு கொண்டுள்ளன. 1000 ரூபாய் நோட்டுக்களின் பங்களிப்பு 39 சதவீதம். பிற நோட்டுக்களின் பங்களிப்பு 16 சதவீதம். கணக்கில் வராமலே புழங்கும் பணம் இதில் 80 சதவீதமாகும். வங்கி வழியாக வர்த்தகம் நடைபெற்றால் கணக்கில் காட்டாமல் தப்பிக்க முடியாது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications