Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லிவ் இன் ரிலேஷன் செய்யும் இளைஞர்கள் பற்றி பெற்றோரிடம் தகவல் சொல்லனும்- உத்தரகாண்ட பொது சிவில் சட்டம்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் நிலையில் இனி திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பிற்கு சட்டப்படி அனுமதி பெற வேண்டும் என்பதால் இது பெற்றோருக்கு அவமானத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தும் செயலாகவே கருதப்படுகிறது. அதே வேளையில் இலைமறைவு காய் மறைவாக இருந்த லிவ் இன் ரிலேஷன்ஷிப்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகவே சமூக ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள்.

உத்தரகாண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த மசோதா கடந்த ஆண்டு முதல்வர் புஷ்கர் சிங் தமி தாக்கல் செய்த நிலையில் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.

uttarakhand uniform civil code

இந்த மசோதாவின் அச்சுறுத்தும் அம்சமாக உள்ளது லிவ் இன் ரிலேஷன்ஷிப் உறவில் இருப்பவர்கள் தங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதாகும். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ள ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அப்படி செய்யாவிட்டால் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். லிவ் இன் உறவில் இருப்பவர்கள் பெண்ணாக இருந்தால் 18 வயதுக்கு கீழும் ஆணாக இருந்தால் 21 வயதுக்கு கீழும் இருத்தல் கூடாது. 18 வயது முதல் 21 வயதுள்ளோராக இருந்தால் இருந்தால் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அவர்கள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பற்றி தகவல் தெரிவிக்கப்படும்.

ஒரு வேளை லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் பதிவு செய்யாதது தெரியவந்தால் பொது சிவில் சட்டத்தின்படி அதிகபட்சமாக 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் அல்லது ரூ 10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் பதிவாளரிடம் அளிக்கப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பாக இருந்தால் ரூ 25 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பதுதான் இந்த சட்ட மசோதா.

எல்லாவற்றுக்கும் மேல் லிவ் இன் உறவில் பிறக்கும் குழந்தைகள் சட்டப்பூர்வமான குழந்தையாகவே கருதப்படுவார்கள். அதே போல் லிவ் இன் உறவில் இருக்கும் பெண் தனித்து விடப்பட்டால் அவர் நீதிமன்றத்தை நாடி தனக்கான பராமரிப்பு தொகையை தனது இணையிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த மசோதாவை பொருத்தமட்டில் சமூக சீர்கேடாகவே பார்க்கப்படுகிறது. இத்தனை நாட்களாக இலைமறைவு காய் மறைவாக இருந்த லிவ் இன் உறவுகள், இனி அதிகரிக்க தொடங்கும். பெற்றோரையும் மீறி அரசின் துணையுடன் இவர்கள் ஒரே வீட்டில் வசிக்க தொடங்குவார்கள்.

எந்த விதத்தில் பார்த்தாலும் ஊரறிய பெற்றோரை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் லிவ் இன் ரிலேஷன்ஷிப்கள் அதிகம் முளைக்க ஆரம்பிக்கும். மேலும் திருமண பந்தம் என்பதே கேள்விக்குறியாகிவிடும். யாருக்கு யாரை பிடிக்கிறதோ அவர்கள் அவருடன் வாழலாம். பிடிக்காவிட்டால் வேறொருவருடன் வாழலாம் என்ற ஒரு நிலை ஏற்பட்டுவிடும். எனவே இந்த லிவ் இன் ரிலேஷன்ஷிப் சட்டத்தை பழமைவாதிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள்.

சமூக சீர்கேட்டை, கலாச்சார சீரழிவை ஒரு மாநில அரசே சட்டமாக இயற்றும் போது பெற்றோர்கள் தலையில் இடியை இறக்கியது போல் உள்ளதாகவே இந்த சட்டம் கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+