டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு #earthquake
டெல்லியில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர். இது ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியின் சுற்றுப்புறப்பகுதிகளிலும் உணரப்பட்டது.

ஹரியானாவில் உள்ள பவல் நகரின் தென்கிழக்கே 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகிலுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறி்த்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications