கொல்கத்தாவில் சுரங்கப் பாதையில் திடீரென நின்ற மெட்ரோ ரயில்! மூச்சு முட்டி திணறிய பயணிகள்!!
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: தொழில்நுட்பக் கோளாறால் கொல்கத்தாவில் சுரங்கப் பாதையில் திடீரென மெட்ரோ ரயில் நின்றது. இதனால் பயணிகள் மூச்சு முட்டி திணறிப் போயினர்.

கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட்டில் இருந்து மைதான் ரயில் நிலையங்கள் இடையேயான சுரங்கப் பாதையில் இன்று மெட்ரோ ரயில் திடீரென நின்றுவிட்டது. இதனால் நூற்றுக் கணக்கான பயணிகள் பரிதவித்துப் போனார்கள்.
பல பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிக்கி திணறினர். சக பயணிகளே மூச்சுவிட முடியாமல் திணறியவர்களை காப்பாற்றி சுரங்க பாதையில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். இதனால் கொல்கத்தாவில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications