என் தற்கொலைக்கு மனைவியும், கள்ளக்காதலனுமே காரணம்... வீடியோ சாட்சியோடு கணவர் தற்கொலை
மும்பை: தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியும், அவரது கள்ளக்காதலனுமே தன்னுடைய தற்கொலைக்குக் காரணம் என வீடியோவில் பதிவு செய்து வைத்து விட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் மும்பை வாழ் கணவர் ஒருவர்.
மும்பை அக்ரிபடா பகுதியை சேர்ந்த 38 வயது ஓட்டுநர் சுனில் உக்டே. பெரும்பாலும் பணி நிமித்தமாக வெளியூரிலேயே சுனில் தங்கியதால், அவரது மனைவிக்கு அப்துல் எனும் நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக சுனிலின் மனைவியைக் காணவில்லையாம். தன் மனைவி அவரது கள்ளக்காதலன் அப்துலுடன் தான் ஓடி விட்டார் என முடிவு செய்த சுனில் இது குறித்து போலீசில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
ஆனால் காவல் நிலையத்தில், இவரது புகார் எற்றுக்கொள்ளபடாததால் மனமுடைந்து போனாராம் சுனில்,. மனைவியும் தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார், காவலர்களும் தன்னை அவமானப் படுத்தி விட்டார்கள் என விரக்தியடைந்த சுனில் தற்கொலை முடிவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆனால், தூக்கிட்டு கொள்வதற்கு முன், தனது துயரங்களை எல்லாம் ஒரு வீடியோவாக பதிவு செய்து உடன் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார் சுனில். அந்த வீடியோவில் அவரது மனைவி, மனைவியின் காதலர் அப்துல், புகாரை ஏற்றுக்கொள்ளாத போலீஸ் ஆகியோர் தான் தனது தற்கொலைக்கு காரணமென தெரிவித்துள்ளார் சுனில்.












Click it and Unblock the Notifications