லேட்டா எழுந்ததோட ருசியா சமைக்கல... நீதிபதிகளையே அதிர்ச்சியடைய வைத்த வித்தியாச விவாகரத்து மனு!
மனைவி சீக்கிரமாக எழுந்து ருசியா சமைத்துத் தரவில்லை என்று மும்பையை சேர்ந்த கணவன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

மும்பை : வேலைக்குச் செல்லும் மனைவி பணி முடிந்து வீடு திரும்பியவுடன் தூங்கி எழுந்து தாமதமாக உணவு தயாரித்து தருவதோடு அது ருசியாகவும் இல்லை என்று மும்பையை சேர்ந்த கணவன் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவி காலையில் தாமதமாக எழுவதும் இல்லை ருசியாக சமைத்து தருவதும் இல்லை என்று விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் விவாகரத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
சான்டாக்ரூஸ் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கேகே டேடட் மற்றும் சரங் கோத்வால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தன்னுடைய மனைவி வேலைக்கு செல்வதால் இரவு நேரத்தில் தாமதமாகவே உணவு சமைத்து தருவதாகவும் அவை ருசியானதாக இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோரின் வாக்குமூலம் சான்று
இதற்கு ஆதாரங்களாக தன்னுடைய பெற்றோரின் வாக்குமூலங்களையும் அவர் அளித்திருந்தார். அவர்களும் தங்களை மருமகள் சரியாக பராமரிப்பதில்லை என்று கூறியுள்ளனர்.

பணிக்கு செல்வதோடு கூடுதலாக குடும்ப பாரம்
இந்தப் புகார்கள் குறித்து விளக்கம் அளித்த மனுதாரரின் மனைவி தான் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் தானே செய்வதாக கூறியுள்ளார். மளிகை பொருட்கள் வாங்குவது, சமையல் செய்வது, மாமனார் மாமியாரை பார்த்துக் கொள்வது என்று அனைத்து பொறுப்புகளுமே தன் மீது சுமதப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

மனைவி வாதம்
மனுதாரரின் மனைவியும் தனக்கு ஆதரவான வாக்குமூலங்களாக அக்கம்பக்கத்து வீட்டினரின் கருத்துகளை தாக்கல் செய்திருந்தார். அண்டை வீட்டாரும் அந்தப் பெண் எப்போதுமே ஏதாவது ஒரு வீட்டு வேலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மனு தள்ளுபடி
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பணிக்கு செல்லும் பெண் வீட்டு வேலைகளையும் கூடுதலாக பார்த்துக் கொண் குடும்பத்தாரை கவனித்து வருகிறார். மனுதாரர் விவகாரத்துக்காக கோரும் காரணம் அடிப்படை முகாந்திரம் இல்லாமல் இருக்கிறது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications