கணவன் தொல்லையால் போலீசில் புகார் அளித்த பெண்.. காதல் பாட்டு பாடி சமாதானப்படுத்திய கணவன்
ஜான்சி பகுதியில் கணவன் ஒருவர் போலீசில் புகார் கொடுத்த மாணவியை காதல் பாடல் பாடி சமாதானப்படுத்தி இருக்கிறார்.
ஜான்சி: உத்தரபிரதேசத்தில் ஜான்சி நகரில் கணவனின் தொல்லையால் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன் அங்கேயே காதல் பாடல் ஒன்றை பாடி மனைவியை சமாதானப்படுத்தி உள்ளார்
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் இருந்த அந்த பேமஸ் கணவன் மனைவிக்கு இடையில் சில நாட்களுக்கு முன்பு சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரது மனைவி தனது சொந்த வீட்டுக்கு கோபமாக சென்று இருக்கிறார்.

கணவன் எத்தனை முறை வந்து சமாதானம் செய்தும் அவர் திரும்ப வராமல் இருந்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் திடீர் என்று ஜான்சியில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு சென்று தன் கணவன் மீது புகாரும் அளித்து இருக்கிறார்.
இந்த நிலையில் போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்தனர். போலீஸ் அந்த கணவனை திட்டிக் கொண்டு இருக்கும் போதே அவர் திடீர் என்று பாடல் ஒன்றை பாட ஆரம்பித்தார்.
'ஜீனா ஜீனா'' என்ற காதல் பாடலை அந்த கணவர் பாடினார். இதன் பொருள் ''என்னை உன்னை விட்டு வாழ முடியாத'' என்பதாகும். அவர் இந்த பாடலை தனது மனைவியை பார்த்து பாடினார். இந்த பாடலை கேட்டதும் அந்த பெண் அழ தொடங்கிவிட்டார்.
இதையடுத்து அந்த பெண் கணவன் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கினார். தற்போது அந்த கணவர் 'ஜான்சி நகர் கணவர்' என சோஷியல் மீடியாவில் வைரல் ஆகியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications