ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு வந்த கன்யா குமாரை கேட்டோடு திருப்பி அனுப்பிய போலீஸ்
ஹைதராபாத்: தேச துரோக வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது அவருக்கு வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரோஹித் வெமுலாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மெமுலாவின் மரணத்தை அடுத்து 2 மாதம் விடுப்பில் சென்ற பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பா ராவ் திங்கட்கிழமை பணிக்கு திரும்பினார்.

அவரது வருகையை கண்டித்து மாணவர்கள் அவரின் அலுவலகம் மற்றும் வீட்டை தாக்கினர். போலீசார் வந்து மாணவர்களை கலைந்து போகுமாறு கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டினர்.
இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்திக்க டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் ஹைதராபாத் வந்தார். ஆனால் அவர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய நிர்வாகமும், போலீசாரும் அனுமதி மறுத்துவிட்டனர்.
இது குறித்து கன்யா குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என்னை பல்கலைக்கழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்கள் குரலை அடக்கி வைக்க முடியாது. பல்கலைக்கழகத்திற்குள் ஒரு மாணவரை நுழையவிடாமல் தடுப்பது வேதனை அளிக்கிறது.
மாணவர்களின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது. தடியடி நடித்தி மாணவர்களை ஒடுக்க முடியாது. இந்த போராட்டம் தொடரும். நாட்டை, அரசியலமைப்பு சட்டத்தை, ஜனநாயகத்தை காக்கவே இந்த போராட்டம். ரோஹித் வெமுலா, அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் கனவு நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications