ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு வந்த கன்யா குமாரை கேட்டோடு திருப்பி அனுப்பிய போலீஸ்
ஹைதராபாத்: தேச துரோக வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது அவருக்கு வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரோஹித் வெமுலாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மெமுலாவின் மரணத்தை அடுத்து 2 மாதம் விடுப்பில் சென்ற பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பா ராவ் திங்கட்கிழமை பணிக்கு திரும்பினார்.

அவரது வருகையை கண்டித்து மாணவர்கள் அவரின் அலுவலகம் மற்றும் வீட்டை தாக்கினர். போலீசார் வந்து மாணவர்களை கலைந்து போகுமாறு கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டினர்.
இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்திக்க டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் ஹைதராபாத் வந்தார். ஆனால் அவர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய நிர்வாகமும், போலீசாரும் அனுமதி மறுத்துவிட்டனர்.
இது குறித்து கன்யா குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என்னை பல்கலைக்கழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்கள் குரலை அடக்கி வைக்க முடியாது. பல்கலைக்கழகத்திற்குள் ஒரு மாணவரை நுழையவிடாமல் தடுப்பது வேதனை அளிக்கிறது.
மாணவர்களின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது. தடியடி நடித்தி மாணவர்களை ஒடுக்க முடியாது. இந்த போராட்டம் தொடரும். நாட்டை, அரசியலமைப்பு சட்டத்தை, ஜனநாயகத்தை காக்கவே இந்த போராட்டம். ரோஹித் வெமுலா, அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் கனவு நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications