நான் ஒன்றும் உதவியற்றவள் இல்லை, செல்வாக்கு மிக்கவள்: அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: நான் ஒன்றும் எதையும் செய்ய முடியாதவள் இல்லை. மாறாக மிகவும் செல்வாக்கு வாய்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளது வெளியுறவுத் துறை அமைச்சரின் எதையும் செய்ய முடியாத நிலையை காண்பிக்கிறது. ஒபாமா இந்தியா வந்தபோது வெளியுறவுத் துறை அமைச்சரை மேடையில் கூட அமரவிடவில்லை என ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

சுக்லாவின் பேச்சுக்கு பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,
நான் ஒன்றும் எதையும் செய்ய முடியாதவள் இல்லை. நான் செல்வாக்குமிக்க வெளியுறவுத் துறை அமைச்சர். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்தபோது நான் பிரதமர் அருகே அமர்திருந்தேன். நீங்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கலாம்.
நான் இலங்கை சென்றபோது தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பேசினேன். இவ்வாறு கூறுவது சரியில்லை என்று இலங்கை பிரதமர் விக்ரமசிங்கேவிடம் தெரிவித்தேன். மீனவர் பிரச்சனை பற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நான் இலங்கை பிரதமருடன் பேசியது கேமராவில் பதிவாகியுள்ளது. அவரின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எங்களின் கண்டனத்திற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. நாம் கூறியதை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பதையே அவர்களின் மௌனம் தெரிவிக்கிறது.
பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரு இந்திய மீனவர் கூட இலங்கை கடற்படையினரால் கொல்லப்படவில்லை என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா அல்லது இலங்கையில் எந்த மீனவரும் கைதாவதோ, சிறை பிடிக்கப்படுவதோ இல்லாத நிலை ஏற்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications