வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்ற தாமொன்றும் மோடி அல்ல… சொல்கிறார் ராகுல்
விஜயவாடா: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்ற தாமொன்றும் மோடி அல்ல என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் ஏழைகளை முன்னேற்றம் அகிம்சை ஆயுதம் என்றும் அவர் கூறினார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஏழ்மையை விரட்டுவதற்கு பதிலாக ஏழைகள் மீது பிரதமர் மோடி, சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திவிட்டதாக சாடினார்.
வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சியைப் போல ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாயை அளிக்கும் திட்டத்தையும் காங்கிரஸ் செயல்படுத்தும் என்றார்.
வாக்களிப்பதற்கு மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் சிஸ்டம்.. தேர்தல் ஆணையம்
மேலும், ஏழைகளை அடையாளம் காண்பதே முதன்மைப் பணி. ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருவாய் உடைய ஏழைகள், நாடு முழுதும் அடையாளம் காணப்படுவார்கள்.
ஆந்திராவில் நகரம், கிராமம் என இல்லாமல் நாடுமுழுவதும் ஏழைகள் கண்டறியப்படுவார்கள். ஆதார் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி ஏழைகளை அடையாளம் கண்ட பிறகு, அவர்கள் வங்கி கணக்கில் 6,000 ரூபாய் செலுத்தப்படும் எனவும் கூறினார்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்ற தாமொன்றும் மோடி அல்ல என்று கூறிய ராகுல் காந்தி, அனைவருக்கும் 15 லட்ச ரூபாய் என்பது உள்ளிட்ட மோடியின் கடந்த தேர்தல் உறுதிமொழிகளை சுட்டிக்காட்டினார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்தார்