சு.சுவாமி இப்போல்லாம் சோஷியல் மீடியா பக்கம் வருவதில்லை ஏன் தெரியுமா?
டெல்லி: சோஷியல் மீடியாவான டிவிட்டரில் தினமும் மிகவும் ஆக்டிவாக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, தற்போதெல்லாம் டிவி்ட்டுகளை குறைத்துக் கொண்டுள்ளார். இதற்கு காரணம் தெரியுமா?
நெல்லை திருமண நிகழ்ச்சியால் ஏற்பட்ட கேலிகளுக்கு பயந்துதான், எஸ்கேப் ஆகிவிட்டார் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு. சுப்பிரமணியன்சுவாமி, அரசுக்கே நெருக்கடி தரப்போகும் முக்கிய அஜென்டாவில் பிசியாக உள்ளாராம்.

இதுகுறித்து அவரே தானாக முன்வந்து டிவிட்டரில் தெரிவித்துள்ளார். "எனது டிவிட்டுகள் எண்ணிக்கை குறைய, 'ராமர் கோயில் மற்றும் சட்ட கோணங்கள்' என்ற புத்தகத்தை நான் எழுதி முடிக்க விரைந்து கொண்டுள்ளதுதான் காரணம்" என்று கூறியுள்ளார்.
The low count in tweets from me is because I am racing to complete my new book Building the Rama Temple: Legal Aspects.
— Subramanian Swamy (@Swamy39) June 17, 2015 விராட் இந்துஸ்தான் என்ற பெயரில் சு.சுவாமி இந்து ஆதரவு அமைப்பு நடத்திவருகிறார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அந்த அமைப்பு சார்பில் வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் தினமும் நாலைந்து டிவிட் போடுவார். டிவிட்டரில் ஃபாலோவர்ஸ்களுடன் கலந்துரையாடல் நடத்துவார். இப்போது, நாளைக்கு ஒரு டிவிட்டே அபூர்வமாகிவிட்டது.












Click it and Unblock the Notifications