நான் ரொம்ப பிஸி.. விசாரணைக்கு நேரம் இல்லை.. சிபிஐக்கு மெயில் அனுப்பிய நீரவ் மோடி!
நீரவ் மோடி சிபிஐ விசாரணையில் கலந்து கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
டெல்லி: நீரவ் மோடி சிபிஐ விசாரணையில் கலந்து கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் மிகவும் திமிராக மெயில் அனுப்பி இருக்கிறார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

விசாரணை நடக்கிறது
தற்போது இவரின் நெருங்கிய உறவினர்கள் வீட்டில் சோதனையும், விசாரணையும் நடக்கிறது. முக்கிய பணியாளர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல வங்கி ஊழியர்களும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

மெயில்
அவர் எங்கே இருக்கிறார் என்று சரியாக தெரியாத காரணத்தால் சிபிஐ தரப்பு அவருக்கு மெயில் அனுப்பி இருக்கிறது. விசாரணை நடக்க இருக்கிறது நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் இந்த இமெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது.

வேலை இருக்கு
தற்போது இதற்கு நீரவ் மோடி பதில் அளித்துள்ளார். அதில் ''எனக்கு இங்கு நிறைய வேலை இருக்கிறது. என்னால் விசாரணையில் கலந்து கொள்ள முடியாது. வெளிநாட்டில் நிறைய வியாபாரம் செய்ய இருக்கிறது'' என்றுள்ளார்.

மீண்டும் மெயில்
இதையடுத்து சிபிஐ அவருக்கு மீண்டும் மெயில் அனுப்பி இருக்கிறார்கள். அதில் ''சிபிஐ விசாரணையில் நீங்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் நாடு திரும்ப வேண்டும்'' என்றுள்ளார்கள். ஆனால் இதற்கு நீரவ் மோடி பதில் அளிக்கவில்லை.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications