ஜெயலலிதா மீது நான் புகார் கொடுக்க, திமுக பெயர் வாங்கிவிட்டது: சு. சாமி
டெல்லி: நான் தான் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு குறித்து முதலில் புகார் அளித்தேன், ஆனால் திமுக அதற்கான பெயரை வாங்கிவிட்டது என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 18 ஆண்டுகளாக நடந்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிபதி குன்ஹா அறிவித்துள்ளார். மேலும் அவரின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறுகையில்,
சொத்துக்குவிப்பு குறித்து ஜெயலலிதா மீது நான் தான் முதல் ஆளாக புகார் அளித்தேன். ஆனால் தற்போது திமுக பெயரை வாங்கிவிட்டது. இந்த அளவு தான் தண்டனை கிடைத்துள்ளது என ஜெயலலிதா மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றார்.
இதற்கிடையே சென்னையில் உள்ள சுப்பிரமணியன் சாமியின் வீட்டை அதிமுகவினர் கல்வீசித் தாக்கியுள்ளனர்.