வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும்.. நம்பிக்கை உள்ளது .. பினராயி விஜயன் நெகிழ்ச்சி

வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் கேரளா முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

இடுக்கி: வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் கேரளா முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் கடந்த 100 வருடங்களுக்கு இல்லாத அளவிற்கு மழைபெய்து வருகிறது. கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக 370க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிர் இழந்துள்ளனர்.

I hope Kerala will soon recover from floods says Kerala Chief Minister

பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவை சுற்றியுள்ள பிறமாநிலங்களில் இருந்து கேரளா மக்களுக்கு உதவிகரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து கேரளாவில் ஏற்பட்டு வெள்ள நிலைமையை பற்றி கூறினார்.

அதில், கேரளாவில் இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 22,034 பேர் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டனர்.

கேரளாவில் வெள்ளத்தால் 50 லட்சம் பேர் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளனர். இருப்பிடத்தை விட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களும் மீட்கப்படுவார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கும். வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் என்று கேரள முதல்வர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+