பாஜக விஐபிக்களால் இறக்கிவிடப்பட்ட பயணிகள்: மோடி தலையிட்டதால் ஸாரி கேட்ட விமானத்துறை அமைச்சர்
டெல்லி: மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு, பாஜகவின் ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் மற்றும் உதவியாளர் பயணிக்க விமானத்தில் இருந்து 3 பேர் இறக்கவிடப்பட்டதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லேவில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் 1 மணிநேரம் தாமதமாக கிளம்ப மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு காரணமாக இருந்துள்ளார். மேலும் விமானத்தில் அவர், ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் மற்றும் உதவியாளர் பயணிக்க அதில் இருந்த 3 பேர் கீழே இறக்கிவிடப்பட்டனர்.

அதற்கு முன்பு மும்பையில் இருந்து அமெரிக்கா கிளம்பிய ஏர் இந்தியா விமானம் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸால் 1 மணிநேரம் தாமதமாக கிளம்பியது.
இந்த விவகாரங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் கேட்டதோடு, இந்த விஐபிக்களின் செயல்கள் ஏற்கத்தக்கவை அல்ல என எச்சரித்துள்ளது.
இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விமானம் தாமதாக கிளம்பியது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முதல் விசாரணை அறிக்கை வரட்டும். உண்மையை தெரிந்து கொண்டு நான் என் கடமையை செய்கிறேன்.
இது போன்று விவகாரங்கள் ஏர் இந்தியாவில் மட்டும் அல்ல அனைத்து நிறுவன விமானங்களிலும் வழக்கமாக நடக்கிறது. ஏர் இந்தியா சரியான நேரத்திற்கு விமானத்தை எடுப்பதால் அதை மிஸ் பண்ணுவதாக என் சகாக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள் என்றார்.
2 விமானங்கள் தாமதமாக கிளம்பியது குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் கேட்டுள்ள நிலையில் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications