கருப்புப்பண விவாகாரத்தில் மும்பையில் 90 பேரின் மீது விசாரணை- வருமான வரித்துறை அறிவிப்பு!
மும்பை: கருப்புபண விவகார வழக்கில் சிக்கியுள்ளவர்களில் 90 பேரின் மீதான விசாரணையை மும்பையில் தொடங்க உள்ளது வருமான வரித்துறை.
கருப்பு பண விவகார வழக்கில வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 இந்தியர்களின் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
இதில் இடம்பெற்றுள்ள மும்பை நகரை சேர்ந்த 90 நபர்களில் கணக்கில் குற்றம் எதுவும் நடைபெற்றுள்ளதாக என்பதை அறிய விசாரணை நடத்த முதல்கட்ட நடவடிக்கையை மும்பை வருமானவரித்துறை விரைவில் தொடங்க உள்ளது.

மும்பையில் 235 பேர்:
வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 இந்தியர்களில், 235 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்று மும்பை வருமான வரி புலனாய்வு இயக்குநரக தகவல்கள் தெரிவித்துள்ளது.

90 பேரின் விவரங்கள்:
90 நபர்களின் வங்கி கணக்கு விவரங்கள் தொடர்பாக சுவிஸ் வங்கி அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றம் பற்றிய விசாரணை:
வங்கி கணக்கில் குற்றம் நடந்துள்ளதா என்பதை நிர்ணயிக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு:
வெளிநாடுகளில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களை கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் என்று வகைப்படுத்த முடியாது. நாங்கள் அனைத்து அம்சங்களையும் சரிபார்ப்போம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications