அரசியலில் ஈடுபடுகிறேன்...இரும்புப் பெண் என்ற பெயருக்கு ஏற்ப வாழ விருப்பம்: இரோம் ஷர்மிளா
இம்பால்: 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாகவும் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் மணிப்பூர் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா அறிவித்துள்ளார்.
மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 2000-ம் ஆண்டு முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார் இரோம் ஷர்மிளா.
I want to join politics as I've been called the Iron lady of Manipur & I want to live upto that name: Irom Sharmila pic.twitter.com/k4URuWm5yt
— ANI (@ANI_news) August 9, 2016
இந்த நிலையில் தம்முடைய போராட்டத்தைக் கைவிடுவதாக இரோம் ஷர்மிளா அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்கொலை முயற்சி வழக்கில் மருத்துவமனையில் காவலில் இருந்த அவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தாம் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக கூற அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இம்பாலில் செய்தியாளர்களை சந்தித்தார் இரோம் ஷர்மிளா. அப்போது, தேர்தல் அரசியலில் ஈடுபட உள்ளேன்; நான் அரசியலில் ஈடுபடுவதை சிலர் ஏன் தடுக்கிறார்கள் என புரியவில்லை.
இரும்புப் பெண் என கூறப்படுவதற்கு ஏற்ப நான் வாழ விரும்புகிறேன். மணிப்பூர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications