அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி
நாக்பூர்: அண்ணல் அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் தாம் புத்த மதத்துக்கு மாறப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று இரவு மாயாவதி பேசியதாவது:

அண்ணல் அம்பேத்கர் தமது மரணத்துக்கு முன்னதாக புத்த மதத்துக்கு மாறினார். நானும் மதம் மாறப் போகிறேன். நிச்சயமாக புத்தமதத்தைப் பின்பற்றி தீட்சை பெறுவேன்.
BSP chief Mayawati, in Nagpur: Babasaheb (Ambedkar) had converted his religion sometime before his death. You must be wondering about me too - regarding religious conversion. I will definitely take 'diksha' to become a follower of Buddhism but only when the time is right... (1/2) pic.twitter.com/C4f3xrR0Iw
— ANI (@ANI) October 14, 2019
ஆனால் அதற்கு சரியான காலம் வர வேண்டும். நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டி புத்த மதத்துக்கு மாறுவேன். அரசியலில் நாங்கள் இருந்தாலும் அம்பேத்கரை பின்பற்றுகிறவர்களால் இத்தகைய மதமாற்றம் என்பது சாத்தியமானதுதான்.
இவ்வாறு மாயாவதி பேசினார்.












Click it and Unblock the Notifications