காங்கிரஸ் என்னை கொடுமைப்படுத்தியது.. நான் திருப்பி கொடுப்பேன்.. பாஜகவில் இணைந்த சாத்வி சபதம்!
காங்கிரஸ் கட்சியின் உத்தரவின் பெயரில் போலீசார் தன்னை ஜெயிலில் கொடுமைப்படுத்தினார்கள் என்று மலேகான் குண்டுவெடிப்பில் சிறை சென்ற சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.
போபால்: காங்கிரஸ் கட்சியின் உத்தரவின் பெயரில் போலீசார் தன்னை ஜெயிலில் கொடுமைப்படுத்தினார்கள் என்று மலேகான் குண்டுவெடிப்பில் சிறை சென்ற சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார். இவர் பாஜக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா தாக்குர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.
இதில் கைது செய்யப்பட்டவர்தான் இந்து சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர். இவர் மொத்தம் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

பெயிலில் வந்தார்
இதையடுத்து உடல் நலம் சரியில்லை என்று கூறி பெயிலில் வெளியே வந்த இவர் தற்போது இவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் இவர் பாஜகவில் இணைந்தார். வரும் லோக்சபா தேர்தலில் இவர் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் திக் விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிட இருக்கிறார். போபால் தொகுதியில் இவர் களமிறங்குகிறார்.
லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!

என்ன பேட்டி
இந்த நிலையில் இதுகுறித்து சாத்வி தற்போது பேட்டி அளித்து இருக்கிறார். அதில் என் மீது காங்கிரஸ் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறது. அதை பொய் என்று நிரூபித்து நான் சிறையில் இருந்து முழுமையாக வெளியே வருவேன். என்னை காங்கிரஸ் படுத்திய கொடுமைகளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

காங்கிரஸ் எப்படி
காங்கிரஸ் உத்தரவின் பேரில் நான் முறைகேடாக கைது செய்யப்பட்டேன். என்னை 13 நாட்கள் அடைத்து வைத்து கொடுமை படுத்தினார்கள். தினமும் என்னை மோசமாக தாக்கினார்கள். இதை எல்லாம் நான் மறக்க மாட்டேன். நான் செய்யாத குண்டுவெடிப்பு சம்பவத்தை என் மீது போட்டு, எனக்கு முடிவு கட்ட பார்த்தார்கள்.

இந்து காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி இந்துக்களை தீவிரவாதிகள் என்று கூறுகிறது. நான் ஒரு இந்து சாமியார் என்பதால் என்னை இப்படி கொடுமை படுத்துகிறார்கள். அவர்களுக்கு மக்கள்தான் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். நான் பட்ட துன்பங்களை எந்த விதமான சகோதரியும் வாழ்க்கையில் பட கூடாது என்று, சாத்வி குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications