அருணாச்சல் பிரதேசத்தில்... சீன எல்லை அருகே 2 நவீன லேண்டிங் தளங்களை திறந்த விமானப்படை
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையையொட்டி உள்ள ஜைரோ மற்றும் அலாங் ஆகிய இடங்களில் விமானங்கள் தரையிறங்க மேம்படுத்தப்பட்ட தளங்கள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.
அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையோரம் உள்ள ஜைரோ மற்றும் அலாங் ஆகிய இடங்களில் விமானப்படை சார்பில் விமானங்கள் தரையிறங்க மேம்படுத்தப்பட்ட தளங்கள் அமைக்கப்பட்டன. அந்த தளங்கள் 12ம் தேதி திறந்து வைக்கப்பட்டன.
இது குறித்து விமானப்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
மெசுக்கா, பாசிகாட் மற்றும் டுடிங் ஆகிய இடங்களிலும் மேம்படுத்தப்பட்ட லேண்டிங் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அடுத்த 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும். ஈஸ்டர்ன் ஏர் கமாண்டின் கட்டுப்பாட்டில் உள்ள 8 லேண்டிங் தளங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
டுடிங், மெசுக்கா, அலாங், தவாங், ஜைரோ, பாசிகாட், வாலாங் மற்றும் விஜயநகரில் உள்ள லேண்டிங் தளங்கள் தான் மேம்படுத்தப்படுகின்றன என்றார்.