இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. காஷ்மீர் மலையில் பற்றி எரியும் தீ
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பதார் மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படை விமானம் கீழே விழுந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்வார் மாவட்ட மலை மற்றும் வனப்பகுதி நிறைந்த இடமாகும். இந்நிலையில் தான் பதார் எனும் பகுதியில் இருமலைகளுக்கு இடையே இருந்து குபுகுபுவென புகை வெளியேறி வருகிறது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இதனால் சம்பவ இடத்துக்கு காவல்துறை, பாதுகாப்பு படை பிரிவினர், மீட்பு படையினர் விரைந்துள்ளனர். இதுபற்றி டிஐஜி சர்குன் சுக்லா கூறுகையில், ''சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். அங்கு என்ன நடந்தது? என்பது தெரியவில்லை. இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். புகை வெளிவரும் இடம் என்பது சமதளமற்ற பகுதியாக இருக்கலாம். இதனால் சரியான இடத்தை கண்டுப்பிடிப்பது பெரும் சவாலாக இருக்கும்'' என்றார்.
கிஷ்வார் மாவட்டம் மலைகள் நிறைந்த இடமாகும். வனப்பகுதியும் உள்ளது. இந்த நிலப்பரப்பின் மீது இந்திய விமானப்படை ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் அடிக்கடி பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கமாகும். அப்போது சில சமயங்களில் ஹெலிகாப்டார்கள் விபத்தில் சிக்கி உள்ளன.












Click it and Unblock the Notifications