வந்தே மாதரத்திற்கு எதிர்ப்பா?.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. "ஒடிஸாவின் மோடி" ஆவேசம்
புவனேஸ்வரம்: வந்தே மாதரம் பாடலை ஏற்காதவர்கள் இந்தியாவில் வாழ்வதற்கு தகுதி அற்றவர்கள் என மத்திய இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி கூறியுள்ளார்.
புவனேஸ்வர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய கால்நடைத் துறை, சிறுகுறு நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி கலந்து கொண்டார். இவர் ஒடிஸாவின் மோடி என அழைக்கப்படுகிறார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறுகையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை மோடி அரசு நீக்கியது. இதற்கு வலுவான எதிர்க்கட்சிகளே ஆதரவு தெரிவித்தன.

ஒருங்கிணைந்த பகுதி
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், சியாச்சின் ஆகிய இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸிடம் தெளிவாக கூறியுள்ளார்.

மற்ற மாநிலங்கள்
72 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் மக்களுக்கான முழு உரிமைகளை பாஜக அரசு மீட்டு கொடுத்துள்ளது. இதனால் அங்கு அமைதி நிலவுகிறது. காஷ்மீரில் மற்ற மாநிலத்தவர்களும் நிலம் வாங்குவது அதிகரித்துள்ளது.

முட்டி மோதி
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை உலக நாடுகளே ஏற்றுக் கொண்டுள்ளன. எனினும் இந்த நடவடிக்கையால் பயங்கரவாத ஆதரவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முட்டி மோதி இந்த நடவடிக்கையை திரும்ப பெற முயற்சிக்கின்றனர். ஆனால் முடியவில்லை.

துணிச்சல்
மத்திய அரசின் துணிச்சலான நடவடிக்கையால் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஏராளமானோர் உயிரிழந்த போது பயங்கரவாதிகளை ஆதரிப்போர் ஏன் கவலைப்படவில்லை. இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை ஏற்காதவர்கள், இந்தியாவில் வாழ தகுதியற்றவர்கள் என கூறியுள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!











Click it and Unblock the Notifications