எல்லையில் அத்துமீறினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்...: பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எல்லையில் அத்துமீறினால் தொடர்ந்தும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கமாட்டோம்.. தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி பிக்ரம்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிக்ரம்சிங், பாகிஸ்தான் எல்லையில் விதிகளை பின்பற்றினால் நாங்களும் பின்பற்றுவோம். அவர்கள் அத்துமீறினால் நாம் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க மாட்டோம். நாமும் பதிலடி கொடுப்போம்.
ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் சனிக்கிழமையன்று யுத்த நிறுத்த மீறலை பாகிஸ்தான் நிகழ்த்தியது. நாம் அதற்கு பதிலடி கொடுத்தோம். எல்லையில் நிகழும் இதுபோன்ற மோதல்களும் சிறிய ரக போர்கள்தான்.
இத்தகைய யுத்த நிறுத்த மீறல்கள், காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யவே நிகழ்த்தப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications