பிரதமருக்கு கொஞ்சமாவது வெட்கம் இருந்தால் பதவி விலகட்டும்: பாஜக
Subscribe to Oneindia Tamil

தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராகுலின் எதிர்ப்பு அவருக்கும், பிரதமருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதையே காட்டியது.
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் பிரகாஷ் ஜவாதேகர் கூறுகையில்,
பிரதமருக்கு கொஞ்சமாவது வெட்கம் இருந்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யட்டும் என்றார்.
இந்நிலையில் ராகுல் காந்தி மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிரதமரை கேலி செய்த ராகுல் உடனே பதவி விலக வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications