மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசத் துரோக சட்டத்தை இன்னும் கடுமையாக்குவோம்.. ராஜ்நாத் சிங் பிரச்சாரம்
மிர்சாபூர்: மக்களவை தேர்தலில் வென்று பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசத் துரோக சட்டம் இன்னும் கடுமையாக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சார கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய ராஜ்நாத் சிங், ஆட்சிக்கு வந்தால் தேசத் துரோக சட்டம் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது அக்கட்சி தேச பாதுகாப்பில் கொண்டுள்ள அலட்சியத்தையே காட்டுகிறது. புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்களை தாக்கி கொன்றதற்கு பதிலடியாக நமது வீரர்களால் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ பதிலடி கொடுத்ததை எண்ணி பார்க்காமல் , இத்தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என எண்ணிக்கையை கேட்கின்றனர். எண்ணிக்கையால் எடை போட கூடிய விஷயமாக வீரத்தை நினைக்கிறது காங்கிரஸ் என கடுமையாக சாடினார்.
ஆனால் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தற்போது இருப்பதை விட தேசத் துரோக சட்டம் இன்னும் கடுமையாக்கப்படும். அப்படி கடுமையாக்கிவிட்டால் அச்சட்டத்தை மீறி செயல்படும் தைரியம் யாருக்கும் வராது என குறிப்பிட்டார்.
நேரு முதல் சோனியா காந்தி வரை மக்களின் வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை தான் காலங்காலமாக கூறி வருகின்றனர் தற்போது ராகுலும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கை கண்டு அஞ்சியே பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகள், கூட்டணி அமைத்துள்ளன என்றார்
2004 மற்றும் தற்போதைய மக்களவை தேர்தல்களில் நாட்டின் பணவீக்கத்தை முன் வைத்து எவ்வித தேர்தல் பிரச்சாரங்களும் செய்யப்படவில்லை. ஏனெனில் இந்த இரண்டு கால கட்டங்களிலும் பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களே பிரதமராவார்கள். எனவே பணவீக்கத்தை கட்டுக்குள்ளேயே அவர்கள் வைத்திருந்தனர் என முன்னாள் பிரதமர் வாஜ்பாயையும் தற்பாதைய பிரதமர் மோடியையும் ராஜ்நாத் சிங் புகழ்ந்து பேசினார்
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications